தேன் குடிச்ச நிலவு விழி மயங்கம் இரவிது
தினம் தோறும் திருவோணந்தான்
கைபிடிச்ச உறவு கதை எழுதும் அழகிது
திருச்சூரில் திருக்கோலந்தான்
கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாடலே
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாடலே
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாடலே
மழைத் துணைகள் வழியும் போது உயிர் பாடலே
( தேன் குடிச்ச நிலவு )
போகுச் சுழல்களில் போகுச் சுழல்களில்
படகு போல் மனம் உன்னைச் சுத்துதே
சுத்துதே சுத்துதே
மூச்சுக் குழல்களில் மூச்சுக் குழல்களில்
சுகத்தின் வாசத்தில் உயிர் சொக்குதே
சொக்குதே சொக்குதே
நேந்திர வாழைகளை ஏந்திய கால்களிலே
நான் கொஞ்சம் தழுவ நீ கொஞ்சம் நழுவ
இளமை நனைய சிறகு விரிய
என்னமோ செய்யுது என்னமோ செய்யுதடி
( தேன் குடிச்ச நிலவு )
காதல் கதகளி காதல் கதகளி
கிளிகள் கூடுது முதல் ராத்திரியில்
ராத்திரியில் ராத்திரியில்
ஏ வாழை இலைகளில் சாரல் மழைத்துளி
கவிதை பாடுது சுகயாத்திரையில்
யாத்திரையில் யாத்திரையில்
அஞ்சன கண்களிலே கொஞ்சிடும் பூஞ்செடியே
சந்தனம் சிவக்க குங்குமம் கலக்க
இதழும் இதழும் அமுதம் குடிக்க
தீர்த் தள்ளி கொட்டுது தீர்த் தள்ளி கொட்டுதடி
மந்தார மலரே மந்தார மலரே முடித்தாயோ
மன்மத காலையில் ஆனந்தக் கூடத்தில் நீ கூட வருவாயோ