Teeyil vilunda tenaa

தீயில் விழுந்த தேனா
Work
Year
Language

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா

மழையின் நீர் வாங்கி
மலையே அழுவது போல்
தாயின் உயிர் தாங்கி
தனயன் அழுவானோ
உயிரை தந்தவளின்
உயிரை காப்பானா
கடனை தீர்ப்பானா

தங்கம் போலே இருந்தவள் தான்
சருகை போலே ஆனதனால்
சிங்கம் போல இருந்த மகன்
செவிலியை போல ஆவானா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா
நீ சுமந்த பிள்ளையாய்
நான் இருந்தேன் அம்மா
நான் சுமக்கும் பிள்ளையாய்
நீ ஆனாய்….அம்மா

எனக்கு எதும் ஆனதுனா
உனக்கு வேறு பிள்ளை உண்டு
உனக்கு எதும் ஆனதுனா
எனக்கு வேறு தாய் இருக்கா

நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை
கண்ணில் மணியாய் சுமந்தவளை
மண்ணில் விட்டு விடுவானா
மனதில் மட்டும் சுமப்பானா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா

தாயின் மடி தானே
உலகம் தொடங்கும் இடம்
தாயின் காலடியே
உலகம் முடியும் இடம்
உயிரை தந்தவளின்
உயிரை காப்பானா
கடனை தீர்ப்பானா

கருணை தாயின் நினைவினிலே
கல்லும் கொஞ்சம் அழுது விடும்
கண்ணீர் துளிகள் விழுந்த பின்னே
கண்ணின் மணியும் விழுந்துவிடும்

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயும் ஆனவனா

இல்லை தாயுமனவனா
இல்லை தாயுமனவனா 

tīyil viḻunda teṉā
ivaṉ tīyil vaḍinda teṉā
tāyai kākkum magaṉā
illai tāyum āṉavaṉā

tīyil viḻunda teṉā
ivaṉ tīyil vaḍinda teṉā
tāyai kākkum magaṉā
illai tāyum āṉavaṉā

maḻaiyiṉ nīr vāṅgi
malaiye aḻuvadu pol
tāyiṉ uyir tāṅgi
taṉayaṉ aḻuvāṉo
uyirai tandavaḽiṉ
uyirai kāppāṉā
kaḍaṉai tīrppāṉā

e

taṅgam pole irundavaḽ tāṉ
sarugai pole āṉadaṉāl
siṅgam pola irunda magaṉ
sĕviliyai pola āvāṉā

tīyil viḻunda teṉā
ivaṉ tīyil vaḍinda teṉā
tāyai kākkum magaṉā
illai tāyum āṉavaṉā

or sŏllil or ulagam ammā
ulagĕllām or sŏllum ammā
or sŏllil or ulagam ammā
ulagĕllām or sŏllum ammā
nī sumanda piḽḽaiyāy
nāṉ irundeṉ ammā
nāṉ sumakkum piḽḽaiyāy
nī āṉāy….ammā

ĕṉakku ĕdum āṉaduṉā
uṉakku veṟu piḽḽai uṇḍu
uṉakku ĕdum āṉaduṉā
ĕṉakku veṟu tāy irukkā

e

nĕñjai ūṭṭi vaḽarttavaḽai
kaṇṇil maṇiyāy sumandavaḽai
maṇṇil viṭṭu viḍuvāṉā
maṉadil maṭṭum sumappāṉā

tīyil viḻunda teṉā
ivaṉ tīyil vaḍinda teṉā
tāyai kākkum magaṉā
illai tāyum āṉavaṉā

tīyil viḻunda teṉā
ivaṉ tīyil vaḍinda teṉā
tāyai kākkum magaṉā
illai tāyum āṉavaṉā

tāyiṉ maḍi tāṉe
ulagam tŏḍaṅgum iḍam
tāyiṉ kālaḍiye
ulagam muḍiyum iḍam
uyirai tandavaḽiṉ
uyirai kāppāṉā
kaḍaṉai tīrppāṉā

e

karuṇai tāyiṉ niṉaiviṉile
kallum kŏñjam aḻudu viḍum
kaṇṇīr tuḽigaḽ viḻunda piṉṉe
kaṇṇiṉ maṇiyum viḻunduviḍum

tīyil viḻunda teṉā
ivaṉ tīyil vaḍinda teṉā
tāyai kākkum magaṉā
illai tāyum āṉavaṉā

tīyil viḻunda teṉā
ivaṉ tīyil vaḍinda teṉā
tāyai kākkum magaṉā
illai tāyum āṉavaṉā

illai tāyumaṉavaṉā
illai tāyumaṉavaṉā